RSS

மூலிகைவளம் - எருக்ககன்

மருத்துவப் பயன்கள்.- எருக்கன் பால் தீ போலசுடும்.
பட்ட இடம் புண்ணாகும். புழுக்களைக் கொல்லும்.
விஷக்கடிகளை குணமாக்கும். பயிர்களுக்கு எதிர்ப்
பாற்றலைத் தரும்.இலை நஞ்சு நீக்கல் வாந்தியுண்
டாக்குதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக்
கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை
உடையது. பூ, பட்டை, ஆகியவை கோழையகற்றுதல்
பசியுண்டாக்குதல், முறை நோய் நீக்குதல் ஆகிய
பண்புகளையுடையது.

பாம்பு - தேள் கடி - இதன் இலையை அரைத்து 5
கிராம் அளவு பாலில் சாப்பிடவும். அரைத்து
கடிவாயில் கட்டவும். விஷம் இறங்கும். எலிக
கடிக்குக் கொடுக்கலாம்.

குதிக்கால் வலி - பழுத்த இலையை குதிக்கால்
வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை
அதன் மேது வைத்து, ஒத்தடம் கொடுத்துவர
குணமடயும்.

மலக்கட்டு - 20 மி.லி. சிற்றாமணக்ககு எண்
ணெயில் 3 - 5 துளி எருக்கன் பால் விட்டுக்
கொடுக்க மலர்ச்சிக்கல் தீரும்.

வயிற்றுப் பூச்சி - சிறு குழந்தைகளுக்கு வயிற்றில்
கீரிப்பூச்சி, கொக்கிப் புழு இருந்து கொண்டு
வயிற்று வலியை உண்டாக்கும். 5 கிராம்
தேனில் 3 துளி இதன் இலைச் சாறு விட்டு
மத்தித்துக் கொடுக்க புழுக்கள் வெளியேறும்.

காது நோய் - எருக்கன் இலைச் சாறு
50 மி.லி.கலந்து வைக்கவும். இதில் வசம்பு,
பெருங்காயம், இலவங்கம், பூண்டு வகைக்கு
5 கிராம் அளவு போட்டு காய்ச்சி வடித்து
வைக்கவும். இதனைச் சொட்டு மருந்தாகக்
காதில் விடகாதில் சீழ் வடிதல், குருதி
கசிதல், காதில் எழுச்சியினால் வரும் வலி
ஆகியன குணமாகும்.

குட்டநோய் - இதன் இலையும். வேர் பட்டை
யும் சம அளவில் உலர்த்திய பொடி 2-3
கிராம் ஆளவு பசு எண்ணெயில் கலந்து
நாளும் இரு வேளை 48-96 நாள் சாப்பிட
குட்ட நோய் குணமடையும், யானைக்கால்
வியாதியும் குணமாகும். உப்பில்லாமல்
பத்தியம் இருத்தல் வேண்டும்.புளி காரம்
எதுவும் கூடாது. தயிர் பால் மோரில்தான்
சாப்பிடவேண்டும். இப்பொடியை தேங்காய்
எண்ணெயில் கலந்து புண்ணுக்குத் தடவ
குணமடையும்.

காக்கை வலிப்பு - எருக்கன் இலையில்
வெட்டுக்கிளி எச்சமிட்டிருக்கும். அத்துடன்
இலையை எடுத்து உலர்த்திய பொடி 30 கிராம்,
மிளகுத்தூள் 30 கிராம், உந்தாமணி இலைத்தூள்
30 கிராம் சேர்த்து வைக்கவும். இந்த சூரணத்தை
மூக்கில் நசியமிட பொடி போடுவது போல் உறிஞ்ச
காக்கை வலிப்பு வராது.

பல்வலி - எருக்கன் பூ 100 கிராம் , உப்பு 10
கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி
உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால்
சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்
கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல்
கூச்சம் யாவும் குணமடையும்.

ஆஸ்த்துமா - வெள்ளெருக்கன் பூ 100 கிராம்,
மிளகு 50 கிராம், இலவங்கம், குங்கும்ப்பூ,
கோரோசனை வகைக்கு 10 கிராம் சேர்த்து
அரைத்து மிளகளவு மாத்திரையாகச் செய்து
உலர்த்தி வைக்கவும். காலை,மாலை ஒரு
மாத்திரை தேனில் சாப்பிட்டு வந்தால் 48-96
நாளில் ஆஸ்த்துமா, இழப்பு,இரைப்பு, இருமல்,
காசம், சன்னி குணமடையும்.

சிற்றின்பம் - இதே மாத்திரை இரண்டையும்,
5 கிராம் ஜாதிக்காய்த் தூளையும் பாலில்
கலந்து தினமும் இரவில் சாப்பிட்டு வர
சிற்றின்பம் பெருகும்.

வாதவலி, வீக்கம் - எருக்கம் பால் வாதக்
கட்டிகளைக் கரைப்பதன்றி வாத நோய், சந்நிபாதம்
ஐவகைவலி இவற்றைப் போக்கும்.

ஒரு தேக்கரண்டி அளவு நல்லெண்ணெயில் 7
துளி எருக்கம் பாலை விட்டு நன்றாய்க் குலுக்கி
நாசிக்குள் 2-3 துளி விட அளவு கடந்த தும்மல்
உண்டாகும். சிரசிலுண்டான நீரையெல்லாம்
வெளிப்படுத்தும். காக்கை வலிக்குச் சிகிச்சை
செய்யும் போது முதலில் இச்சிகிச்சை செய்
வதினால் மூளையை அநுசரித்த சீதளத்தை
அகற்றும் அந்தத் தும்மலை நிறுத்த வேண்டு
மாயின் முகத்தில் சலத்தால் அடித்துக் குளிர்ந்த
சலத்தைக் கொண்டு நாசியைச் சுத்தப்
படுத்த வேண்டியது.

எருக்கன் பூவால் முறை சுரம் ,போகாநீர் பிநசம்
சுவாசகாசம், கழுத்து நரம்பின் இசிவு ஆகியவை
நீங்கும்.

எருக்கன் பூவிற்குச் சமனெடை மிளகு சேர்த்து
மெழுகு வண்ணம் அரைத்து இரண்டு குன்றிப்
பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலில்
உலர்த்திக் கொண்டு தினம் 2 வேளை ஒவ்வொரு
மாத்திரை வீதம் கொடுத்துவர முரைசுரம் நீங்கும்.

5 பலம் ஆவின் நெய்யில் 10-12 எருக்கம் பூவைப்
போட்டுக் காய்ச்சி வடித்தெடுத்து வேளைக்கு அரை
அல்லது ஒரு தோலா வீதம் கொடுக்க சுவாசகாசம்
நீர்ப்பீநசம் போம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments: