இது ஒரு அழகான தமிழ்ப் பாடல்.
பூனக்கி ஆறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்
ஆனைக்குக் கால்பதினே ழானதே - மானேகேள்
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்
பூனைக்கு ஆறுகால் என்று அவர் பாடவில்லை.
பூனக்கி ஆறுகால் என்றே பாடியுள்ளார்.
பூனக்கி = பூ+நக்கி
பூவை நக்கி தேனையும் மகரந்தத்தையும் சேர்ப்பது தேனி.
தேனிக்கு கால் ஆறுதானே.
புள்ளினத்துக்கு ஒன்பதுகால்
ஆனைக்குக் கால் பதினேழானதே...
இது பின்னப்பெருக்கல் வாய்ப்பாடு
வாய்ப்பாட்டைச்சொல்லி பார்ப்போமே.....
ஒரு கால் - கால்
இரு கால் -அரை
மூன்றுxகால் - முக்கால்
நான்கு xகால் - ஒண்ணு
ஐங்கால்-ஒண்ணேகால்
அறுகால் - ஒண்ணரை
எழுகால் - ஒண்ணேமுக்கால்
எண்கால் - ரெண்டு
ஒம்பத்திக்கால் - ரெண்டேகால்
பறக்கும் புள் - பறவை இனத்துக்கும்
ஒம்பத்திக்கால் ரெண்டேகால் - பறவைகளுக்கு இரண்டே கால்கள்தாம்
உள்ளன.
பதினாறு கால் - நாலு
பதினேழு கால் - நாலேகால்
ஆகவே ஆனைக்கு கால் நாலேகால்தான்.
நாலேதாம் அதன் கால்கள். அதற்குமேல்கிடையாது என்று ஆகிறது.
'முண்டகத்தின்மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்'
'முண்டகத்தில் முழுநீலம்' என்பது தாமரையாகிய முகத்தில்
கண்களாகிய முழுநீலம் விளங்குவதைக் குறிக்கும்.
இது ஒரு அழகான தமிழ்ப் பாடல்.
3:58 AM |
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment