மகனே! தலை! நிமிர்ந்து நில்லடா!
கல்லூரி சென்று கற்கக் காசில்லையா?
கவலை வேண்டாம் விடு
காசிருந்தால் தான் கற்க முடியுமா என்ன?
பள்ளி சென்று
பட்டம் பெற்றால் தான் அறிவாளியா?
கொடுத்த பாலுக்கு
விலை கேக்கும் தாயா நான்?
நானும் கற்றவள் தான்
மற்றவர்களை விடச் சிறப்பாக
வாழக் கற்றவள் தான்!
நான் கற்றதை
உனக்கு நான் கற்றுத் தருகிறேன்
பள்ளிக் கல்லூரி சென்று
கற்க காசில்லை என்ற
கவலையை விடு
நான் கற்றுத் தருவதைக் கொண்டு
நீ தொடுக்கும் கேள்விகளுக்கு
பள்ளி கல்லூரி சென்று
பல கற்றவனுக்கும்
பதில் தெரியாது!
சமூகத்தில் தனக்குத் தான்
முன்னுரிமை வேண்டும்
என்கிற பட்டம் பெற்ற
அறிவாளியைக் கேள்
ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகள் எவையென்று கேள்
ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகளை அறியமுடியாதென்பான்.
உன்னை அறிவிலி,
பேதை, முட்டாள்,
கல்லாதவன் எனக் கேவலப்படுத்தி
உன்னை அடிமைப்படுத்த நினைக்கும்
கயவாளிக் கூட்டத்தைக் கேள்
ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகள் எவையென்று கேள்
நீ தொடுக்கும்
கேள்விகளுக்கு பதிலறியாதவன்
அறிவாளியா?
ஒவ்வொன்றையும் பற்றி
எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதையும்
ஒவ்வொன்றையும் பற்றி
மாமேதைகளிடம் தொடுக்க வேண்டிய கேள்விகள் எவையென்பதையும்
முதலில் அறி!
அறிந்து கொண்டு
கேள்விக்கனைகளைத் தொடு
பள்ளி கல்லூரி சென்றவன்
எண்ணுவதென்ன என்பதும்
புலமையால் எவரொருவரையும் விட
நீ தாழ்ந்தவனல்ல என்பதும்
உனக்குப் புலப்படும்
கல்லூரி சென்று கற்கக் காசில்லையா?
கவலை வேண்டாம் விடு
காசிருந்தால் தான் கற்க முடியுமா என்ன?
பள்ளி சென்று
பட்டம் பெற்றால் தான் அறிவாளியா?
[ஒவ்வொன்றையும் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதையும், ஒவ்வொன்றையும் பற்றி
விளங்கிக் கொள்ள தொடுக்க வேண்டிய கேள்விகள் எவையென்பதையும் http://tamil.isgreat.org/ http://www.tamil.host.sk/ இணையத்தளங்களில் காணலாம். ]
Tags: |
மகனே! தலை! நிமிர்ந்து நில்லடா!
8:44 AM |
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment