"நீ யாருக்கும் குறைந்தவன் இல்லை என்பதை இந்த உலகுக்கு அறிவிக்க வந்தவள் நான்....."
தமிழ் படித்ததனால்
கொஞ்சம்
திமிர் பிடித்தவன் நான்.
நான் ஒருமாதிரி அல்ல
ஒரு "மாதிரி" யாக இருக்க விரும்புபவன்..
வாழ்க்கையில் ஏதேனும் சில சந்தர்ப்பங்களில்
நேர்மைத் தவறி நடக்கும் நிலை வரும்போதெல்லாம்
உன்னால் வேதனைப்பட முடிந்தால்
நீயும் நானும் ஒன்று!
I LovE WalkinG in the RaiN,
Bcoz Nobody knows my CryinG ...
"ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்"
நான் அந்த நிழலொடே –வாழ்கிறேன்
நீயும் நிழலாய் மாறு….
நீ மட்டுமே தொலைந்து –போனாய்
நம் நட்ப்பும் தொலைந்ததா…
எமாறுவோம் என்று தெரிந்தே-யாரும்
எதையும் தேடுவதில்லை…
தேடுகிறேன் நானும்-இன்று
தொலைக்கப்பட்ட நிஜமான நிழலை...
கொஞ்சம் உதவுங்களேன்….தேட
தொலைந்து போன நண்பனை –அல்ல
தொலைக்கப்பட்ட நட்பை…….
தொலைத்தது நானா….இல்லை
தொலைக்க பட்டது நானா…..
போகும் பாதையில் எவ்வித தடங்கலும் இல்லையென்றால் அது உன் பாதை அல்ல....
யாரோ கடந்து போன பாதை... "
கனவுகள் என்னை கலைக்கும் வரை..
விடியல் என் உலகிற்க்கு வர்ணம் பூசும் வரை...
தென்றல் என் மேனி தொட்டு.. சிலிர்க்க வைக்கும் வரை..
பனித் துளி என்னைப் பார்த்து.. பல வண்ணமாய் சிரிக்கும் வரை..
....
இரவின் தனிமையில்.. நான் சுவாசிக்க..
நினைவுகளாய்... நண்பர்கள்.....
என் நினைவிலும்
எனக்காக ஒரு (க)விதை தருவாள்
அவளே என் இ(த)னிமை தமிழ்த்தோழி
பூக்களெல்லாம் பெண்களாம்.
வண்டுகள் எல்லாம் ஆண்களாம். எந்த மூடன் சொன்னது?
பெண் வண்டு உட்காரும் பூ ஆண் பூவாய் இருக்கலாமே!
கொஞ்ச நேரம்
பேசாமலிரு!
தொடர்ச்சியான சங்கீதத்தை
என் காதுகள் ஏற்பதில்லை!
ரோஜா பூவின் அழகை மட்டும் இரசிக்காதே ... அது சுமக்கும் முற்களையும் இரசித்துப் பார்.. வாழ்க்கையின் இரகசியம் புரியும்
**சாகடிக்கபடலாம் .... ஆனால் நான் தோற்க்கடிக்க படமாட்டேன்**
எனக்கு முன்னால் செல்லாதே , நான் பின்னால் வர மாட்டேன், எனக்கு பின்னால் வராதே , நான் வழி நடத்தமாட்டேன் , எனக்கு இணையாக வா , கைகளை கோர்த்து கொண்டு தோழர்களாக செல்வோம்,
என் நண்பர்கள்...
உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் நண்பர்களே........
போராடுவது விடுதலைக்காக..
காத்திருப்பது மரணத்திற்காக...
எனது நம்பிக்கை வெறி மிகுந்த இதயத்தை
துப்பாக்கி இரவைகளால்
துளைக்கவும் முடியாது…
என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!
காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!
அவரை போலவோ, இவரை போலவோ, நானிருக்க ஆசையில்லை, என்னைப்போலவும் யாருமிருக்க ஆசையில்லை, நான் நானாகவும்,நானாக மட்டுமே இருக்க ஆசை!!
நான் செய்யும் "கால"க் கொலைகளை
என் எதிர்காலம் விசாரித்துக்கொண்டிருக்கிறது...
மெளனம் தன்னை மெளனம் என்று
சொன்னால்
அது மெளனம் ஆகாது.
உன் கடிதத்தை
எங்கு வைக்க?
எங்கு வைத்தாலும் ...
இனிப்பென்று நினைத்து
எறும்புகள் கடித்திடுமோ?
என்று
சட்டைப்பையில் வைக்கிறேன்
இதோ கடிக்கிறது இதயத்தை
உன் நினைவுகளின் எறும்புகள்..
உன் கடிதத்தை
படிப்பதில் உள்ள ஆர்வத்தைவிடவும்
பார்த்துக் கொண்டிருப்பதில்தானடி
சுகம் இருக்கிறது.
ஆகவே
வெற்றுத்தாளாயினும் பரவாயில்லை..
கடிதம் அனுப்பிக்கொண்டேயிரு
நான் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.
உனக்கு
கடிதம் எழுதும்பொழுது மட்டும்
கைகள்
அட்சயப்பாத்திரமாகிவிடுகிறதடி!
பாரேன்
எழுத எழுத..
வந்துகொண்டே இருக்கிறது
வார்த்தைகள்!
நீ யாருக்கும் குறைந்தவன் இல்லை என்பதை இந்த உலகுக்கு அறிவிக்க வந்தவள் நான்.....
7:22 PM |
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment