இன்னும்
என் மானத்தை
அடமானம் வைக்காத வீரத்தமிழச்சி நான்
இன்னும்
என் அறிவை
என் சிந்தனைகளை
என் உணர்வுகளை
விலைபேசாத திருச்சிராப்பள்ளிக்காரி நான்
உன்னை ஒன்று கேட்பேன்
சிந்தித்துச் சொல்
வள்ளுவன் பட்டம் பெற்றதால் தான்
குறளை இயற்றினனா?
கம்பன் கல்லூரி சென்றதால் தான்
கவி பாடினனா?
தன்மானத்தை தன்னறிவை
அடமானம் வைத்த
அறிவாளியெனும் வேஷதாரி சொல்கிறான் இன்று
பணம் இருந்தால் தான்
ஒன்றைப் பற்றி அறிய முடியுமாம்
பொருள் இருந்தால் தான்
ஒன்றைப் பற்றி எண்ண முடியுமாம்
எந்த ஞானி இதை
நிரூபித்தான் என்று தெரியவில்லை.
பணம் சம்பாதிக்க
கோடனகோடி வழிகள் உள்ளன.
அறிவை விலைபொருளாக்காதே!
அறிவாளியே
அறிவைக் கேவலப்படுத்தாதே!
அறிவை அடமானம் வைத்துக் கோமாளியாகதே!
அறிவு என்ன பட்டம்
பெற்றவனுக்கே உரிய சொத்தா?
பட்டம் பெற்றால் தான்
அறிவு வளருமா?
பட்டம் பெற்றால் தான்
ஒன்றைப் பற்றி எண்ணமுடியுமா?
எப்படி அடிமையாக
வழவேண்டும் என்பதைக்
கற்றுக் கொடுப்பவன்
ஆசானாக முடியுமா?
அடிமையாக வாழ கற்றுக் கொடுப்பது
கல்வியாகுமா?
அமைதியாக வாழக் கற்றுக் கொடுப்பதல்லவா
கல்வி
எப்படி அடிமையாக
வழவேண்டும் என்பது அறிவாகுமா?
நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம்
குற்றமே என்று சொல்பவன் தான் அறிவாளி
மனிதனை மனிதனாக்குவது
கல்வி என்பவன் தான் ஞானி
என்னைப்போல்
இன்னும் எத்தனையோபேர்
தன்மானத்தை இழக்காதவர்கள்
இவ்வுலகில் இன்னும்
சாகமல்தான் உள்ளார்கள்!
பட்டம் பெறாத நானும்
அறிவாளி தான்.
பல்கலைக் கழகம் செல்லாத நானும்
பலகலைகளைக் கற்றவள்தான்
நான் யாருக்கும் அடிமையில்லை.
நான் சுய சிந்தனையுள்ளவள்.
வீரத்தமிழச்சியான
என்னையே விலைபேசுகிறவன்
அற்பன்.
தமிழன்னையையே
விலைபேசுபவன்
தமிழ் மகனாக முடியுமா?
மானங்கெட்டவனே
நன்றிகெட்டவனே
தமிழன்னை
உன்னிடம் பணம் வாங்கிக்கொண்டா
உனக்குப் அறிவுப் பால் ஊட்டினாள்?
உன் அறிவை விற்பதற்கும்
உன் தாயை, தாரத்தை, மகளை விற்பதற்கும்
என்னடா வேறுபாடு?
கேட்டல் கஷ்டப்பட்டு அறிவைப் பெற்றாயாம்
பொய்யனே!
அறிவு என்பது பண்பு
அறிவைப் பெறவும் முடியாது, அழிக்கவும் முடியாது
துஷ்டனே உன் பொய்களைத்
துவாம்ஷம் செய்வதற்கெனவெ பிறந்தவளடா நான்
விழித்தெழுந்தேனடா
வீரத்திருச்சிராப்பள்ளி தமிழச்சி நான்!
நீ யாரடா
எனக்கு அறிவு புகட்ட
எனக்கறிவில்லையென உனக்கொரு நினைப்போ?
வீழ்த்துவது வீரத்தமிழச்சி
வீழப்போவது அறிவென்ற போர்வையில்
என்னைக் கேவலப்படுத்திய
அறிவாளியெனும் வஞ்சகக்கூட்டம்
நீ சொல்வதைக் கேட்டு நடக்க
நான் என்ன உன் அடிமையா?
உன் அறிவைப் பயன்படுத்தித்தான்
வாழ நான் என்ன உன் படைப்பா?
நான் கடவுளின் படைப்பு
நான் இந்த மண்ணில் வாழத் தேவையான அறிவை
என்னைப்படைத்த இறைவன் எனக்குக் கொடுத்திருக்கானடா
மனிதர்கள் தங்களின் சுய அறிவை
பயன்படுத்தவிடமால் தடுக்கும் நீ
ஒரு துஷ்டனடா
உன் வேஷத்தைக் கலைத்து
உன்னை வீழ்த்த என்னால் முடியாத என்ன?
வேஷதாரி
என்றும் வேஷதாரிதான்.
வாய்மையே வெல்லும் என்பது வல்லவன் வகுத்ததடா
எழு
வேஷத்தை களைந்து வா
உண்மை எதுவெனப் பார்ப்போம்!
வேஷதாரிகள் பெற்றது வேஷதாரிகள் கொடுத்த பட்டம்
என்னிடம் இருப்பது அழிவில்லா அறிவு.
அறிவை விலைபேசும் நீ
ஒரு காலும் அறிவாளியாக இருக்க முடியாது.
அறிவைக்கொண்டு மற்றவனை
அடிமைப்படுத்த நினைப்பவன்
ஒருகாலும் நியாயமானவனாக இருக்க முடியாது.
நியாயமற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இன்று திருட்டு குற்றவாளிகள்
அனைவரும் பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர்கள் தான்.
இதைக் கேட்டு இவர்களுக்கு
பாடம் கற்றுக்கொடுத்தவர்கள்
பொறுப்பேற்றுத் தலைகுனிகிறார்களா?
பொறுப்பில்லாதவர்கள் பேசுகிறார்கள்
பொறுப்பைப் பற்றி!
இன்று பதவியில் உள்ள
பஞ்ச லஞ்சப்புலிகள் அனைத்தும்
மிக உயர்ந்த பட்டம் பெற்றவைகள் தான்
இப்படிப் பட்ட மிருகங்களுக்கு
கற்ற மாமனிதனெனப் பட்டம் வழங்கியதற்காக
எந்தப் பல்கலைக்கழகமாவது
வெட்கப்படுகிறதா?
மிருகங்களை உருவாக்குமிடம்
பல்கலைக் கழகமாகுமா?
பல்கலைக் கழகப் பட்டங்களை
நாம் மதித்துதான் ஆக வேண்டுமா?
மிருகங்களுக்கு
நம்மை நாம் பலி கொடுத்துதான் ஆகவேண்டுமா?
தோன்றிய எதுவும் மறையவில்லையெனில்
மாற்றம் என்பது நடைபெறாது.
என் போலுள்ளவர்களே வாருங்கள்!
நம்மறிவை
விலைபேசியவர்களை வீழ்த்தலாம்!
அறிவை அறிவால் தான்
வீழ்த்த முடியும்.
கல்வியின்
வழியாக ஒருவன்
எதைச் சிந்தித்தான்
என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமா?
பல்கலைக்கழகங்களில்
உள்ளவர்கள் உன்னைவிட
உயர்ந்த சிந்தனையுள்ளவர்கள்
நம்மை வீழ்த்திவிடுவார்கள்
என்று உங்களுக்குள் நடுக்கமா?
வாருங்கள்!
உங்களுக்கு நான்
வழிகாட்டுகிறேன்!
ஒன்றைப் பற்றி
எவரொருவராலும் எண்ணப்படக்கூடியவைகள்
எவையென்பது
http://www.tamil.host.sk/ -ல்
தெளிவாக உரைக்கப்பட்டுள்ளது!
எண்ணிப்பாருங்கள்
திரும்பத் திரும்ப எண்ணிப்பாருங்கள்
உண்மை எதுவெனத் தெரியும் வரைத்
திரும்பத் திரும்ப எண்ணிப்பாருங்கள்
நம் எண்ணங்களை
வெல்லும் திறன்
பட்டம் பெற்றவர்களுக்கு உள்ளதா
என்பதைச் சோதித்துப் பார்க்கலாம்.
வெற்றி நமக்கே!
அறிவை அறிவால் தான் வெல்லமுடியும்!
எதிர்வாதியால் எண்ணப்படக்கூடியவைகள்
என்னவென்பதை
முதலில் அறிந்து கொள்ளுங்கள்!
போரட்டமில்லா வாழ்வு சுவையற்றது.
இது அறிவை வெல்வதற்கான போட்டியல்ல.
இது உரிமைப் போராட்டம்.
பணமுள்ளவனுக்கே அறிவு சொந்தம் என உரிமை கொண்டாடும்
பணந்திண்ணி கழுகுகளிடமிருந்து நம் உரிமையைப் மீட்பதற்கான போராட்டம்!
போராடுவதற்குத் தேவையான அறிவுத்திறன் உன்னிடம் இல்லையா?
தன் மானத்தைக் காப்பாற்றி கொள்ள
உனக்குத் திறனில்லையோ?
தன்மானத்தையும்
தன்னறிவையும்
சுயசிந்தனைகளையும்
மற்றவர்களிடம் அடமானம் வைத்திழந்து
வாழும் வாழ்வொரு வாழ்வா?
தன்மானத்தையும்
தன்னறிவையும்
சுயசிந்தனைகளையும்
மற்றவர்களிடம் அடமானம் வைத்திழந்துதான்
வாழவேண்டும் என நினைப்பவன் அடிமை!
தன்மானத்தையும்
தன்னறிவையும்
சுயசிந்தனைகளையும்
மற்றவர்களிடம் அடமானம் வைத்திழந்து
வாழக்கற்றுக் கொடுப்பது கல்வியல்ல!
தன்மானத்தையும்
தன்னறிவையும்
சுயசிந்தனைகளையும்
மற்றவர்களிடம் அடமானம் வைத்திழந்து
வாழக்கற்றுக் கொடுப்பவன் ஞானியல்ல!
என்னைத்தவிர எவனடா
என்னறிவுக்கு அதிபதி எனக்கேள்
என்னைத்தவிர எவனடா
என் எண்ணங்களுக்குச் சொந்தக்காரன் எனக்கேள்
காதலிக்கப் பட்டப்படிப்புத் தேவையா?
சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை!
படித்தவனும் படித்தவளும் காதலிப்பார்களாம்
பட்டம் விட பட்டப்படிப்புத்தேவையா?
மீன் குஞ்சுகளுக்கு நீந்த கற்றுக்கொடுக்கத் தேவையில்லை
பட்டப்படிப்பு படித்தால் தான் ரொக்கட் விட முடியுமாம்
நீ ஏமாளியாக இருந்தால்...
நான் தான்
இவ்வுலகைப் படைத்த கடவுள் என்று கூறவும் தயங்க மாட்டான்
இக்கால அறிவாளி
உன்னால் சிந்திக்கமுடியாததை
உன்னால் எண்ணமுடியாததை
எந்த அறிவாளியாவது, ஞானியாவது
எண்ணி இருக்கிறானா என்பதை முதலில் அறி
http://www.tamil.host.sk/
அறிவாளி யார்?
மனிதனாக உதித்த அனைவரும் அறிவாளியே!
சிந்தனைச் சிற்பி யார்?
மனிதனாக உதித்த அனைவரும் சிந்தனைச் சிற்பியே!
ஏற்றுக்கொள்ளத் தயக்கமேன்?
சக மனிதர்கள் உனக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்று விரும்புகிறாயா?
மனிதனாகப் பிறந்த உன் காலில்
சக மனிதன் விழவேண்டும் என விரும்புவது மனிதத் தன்மையா?
மனிதத் தன்மையற்றவனை மனிதனெனப் போற்றல் முறையோ?
உண்மை எதுவென அறியும் திறன் உனக்கில்லையோ?
வாய்மையே வெல்லும் என்பதில் உனக்கு நம்பிக்கையில்லையோ?
---
மரணத்தை நோக்கிய வாழ்க்கைப்பயணத்தில்
சுவடுகளைப் முன்னொக்கி பதித்துக்கொண்டிருக்கும்
- ஷாம்லின் ஜோஸஃபின்
http://www.tamil.host.sk/
அறிவாளி யார்?
8:12 AM |
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment