RSS

எனக்கும் அமைதி கிடைக்கும்.

அமைதி கிடைக்குமா?
பூஞ்சோலையில்
பூக்களின் அழகிலே மயங்கினால்
பூக்கும் கவலைகள் கருகி
அமைதி கிடைக்குமா?

வானத்துள் நுழைந்து
வெண்மேகங்களில் தவழ்ந்தாள்
வருத்தும் கவலைகள் விலகி
அமைதி கிடைக்குமா?

இமயத்தில் அமர்ந்து
ஈசனுக்காக தவமிருந்தால்
இதயத்தில் கவலைகள் உதயமாகாமல்
அமைதி கிடைக்குமா?

ஆழியில் மூழ்கி
அலைகளுடன் ஆடினால்
ஆர்ப்பரிக்கும் கவலைகள் கரைந்து
அமைதி கிடைக்குமா?

சொந்தங்களை அழைத்து
சுகமாக பேசிவிட்டால்
சூழ்ந்த கவலைகள் யாவும் விலகி
அமைதி கிடைக்குமா?

குதூகலமாய்
குடும்பத்தோடு குலவிக்கொண்டிருந்தாள்
கொதிக்கும் கவலைகள் குளிர்ந்து
அமைதி கிடைக்குமா?

இயற்கை எழிலில்
இதயத்தை இழந்துவிட்டால்
இரும்பு கவலைகள் யாவும் உருகி
அமைதி கிடைக்குமா??

உறவுக்கு பிரிவு கொடுத்து
உயிருக்கு விடை கொடுத்து
சிதைக்கு சீதனமாய்
தீக்கு திருநீராகி
எள்ளும் நீரும் விட்டு
ஈமக்கிரியைகள் முடிந்தபின்
கவலைக்கும் கல்லறை கிடைக்கும்
எனக்கும் அமைதி கிடைக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments: